ஜிஎஸ்டியால் சிறிய, நடுத்தர வர்த்தகர்கள் பாதிப்பு

ஜிஎஸ்டியால் சிறிய, நடுத்தர வர்த்தகர்கள் பாதிப்பு

1 mins read

இந்தியாவில் அமல்படுத்தபட்டு இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) காரணமாக இந்த காய்கறி வியாபாரிகள் போன்ற சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் இவர்களுக்கு உடனடியாக அரசாங்கம் உதவ வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் இயக்கம் பரபரப்பாக வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அக்டோபர் முதல் வாரத்தில் ஜிஎஸ்டி மன்றம் கூடும்போது சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது. படம்: இந்திய ஊடகம்