சென்னை புறநகர்ப் பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. அங்குள்ள குடியிருப்புகளில் சிக்கி இருப்பவர்களை மீட்புக்குழுவினரும் போலிசாரும் ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர். நேற்று மழையின் தாக்கம் குறைந்திருந்ததால் சென்னை நகரில் ஓரளவு இயல்பு வாழ்க்கை திரும்பியது. எனினும் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால் தாழ்வுப் பகுதிகளில் குடியிருப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. படம்: சதீஷ்
தாழ்வான பகுதிகளில் இருந்து ரப்பர் படகுகள் மூலம் பொதுமக்கள் மீட்பு
1 mins read
-

