தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கக் கோரி நூதன போராட்டம்

1 mins read
1219eaf4-bb5d-4217-9c1c-e73d63f7c12e
-

பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர், கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாழை இலை, பாக்கு மட்டை தட்டுகள் ஆகியவற்றுடன் போராட்டம் நடத்தினர். உணவகங்கள், தேநீர் கடைகளில் பிளாஸ்டிக் கப்புகளுக்குப் பதிலாக கண்ணாடி, சில்வர் டம்ளர்களையும் காகித கப்புகளையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும் எனவும், பிளாஸ்டிக் உறைகளுக்குப் பதிலாக சணல் பை, துணிப் பை மற்றும் காகிதப் பைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர். படம்: தகவல் ஊடகம்