உலகெங்கும் புத்தாண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் தமிழகத் துணை முதல்வர் ஓபிஎஸ் புத்தாண்டைக் கொண்டாடியுள்ளார். பொதுமக்கள் புத்தாடைகள் உடுத்தியும் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புத்தாண்டை ஒட்டி கோயில் களில் சிறப்புப் பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களுடன் மகிழ்ச்சியாக ஓபிஎஸ் தனது புத்தாண்டைக் கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப் படங்களை ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படம்: ஊடகம்
ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய துணை முதல்வர்
1 mins read
-

