பொங்கல் திருநாளை ஒட்டி கோயம்பேடு சந்தையில் கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. சந்தையின் எந்தப் பக்கம் திரும்பினாலும் கரும்புகளும் மஞ்சள் கிழங்குகளும் கொட்டிக்கிடக்கின்றன. அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான கரும்புகள் வந்து குவிகின்றன. இதனால் இந்தாண்டு குறைவான விலைக்கு கரும்புகள் கிடைப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களாக கரும்பு விற்பனை நன்றாக இருப்பதாக வியாபாரிகள் தரப்பிலும் கூறப்படுகிறது. படம்: சதீஷ்
பொங்கல் திருநாளுக்காக சென்னையில் குவிந்த கரும்புகள்
1 mins read
-

