எடப்பாடி குற்றச்சாட்டு: முன்னைய திமுக அரசு ஓய்வூதியங்களை வழங்கவில்லை

1 mins read

மதுரை: பேருந்து பயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டுதான் பேருந்துக் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது என்று தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித் துள்ளார். "தினமும் 1.40 கோடி பேர் பேருந்துகளில் பயணம் செய்கின்ற னர். அதை கருத்தில்கொண்டுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்படு கிறது," என்று அவர் குறிப்பிட்டார். இதர மாநிலங்களுடன் ஒப்பிடு கையில் தமிழகத்தில் கட்டணம் குறைவு என்று கூறிய அவர், கட்டண உயர்வால் எட்டுக் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தாலும் நான்கு கோடி ரூபாய் கடனில்தான் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன என்று தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.