சென்னை: தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், அனைத்து துணைவேந்தர்களின் காலங்களிலும் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக பாமக இளையரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல் செய்வதற்காகவே கோடிக்கணக்கில் பணம் கொடுத்து துணைவேந்தர் பதவியை பலர் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். "தமிழகத்தில் உயர்கல்வி தழைக்க வேண்டுமானால், ஊழல் கழகங்களாக மாறிவிட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சீரமைக்கப்பட வேண்டும். எனவே, கடந்த 15 ஆண்டுகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நடந்த ஊழல்கள் பற்றி சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். இந்த ஊழலில் அமைச்சர்களைத் தாண்டி முதல்வர் வரை பலருக்கு தொடர்புள்ளது," என அன்புமணி கூறி உள்ளார்.
பல்கலைக்கழகங்களில் ஊழல்: சிபிஐ விசாரணை கோரும் அன்புமணி
1 mins read

