திருப்பதி: வேலூர் மாவட்டம் தேட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஜீத் (படம்). இவர் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். பகுதி நேரமாக கார் ஓட்டுநர் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு திருப்பதி அருகே கரக்கம்பாடி சாலையில் பகுதிநேர செய்திக்கொத்து ஓட்டுநர் பணியில் அஜீத் ஈடுபட்டிருந்தார். அப்பேது, அங்கு ரேந்துப் பணியில் இருந்த செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு பேலிசார் காரை வழிமறித்தனர்.
பின்னர், காரில் ஓட்டுநராக இருந்த அஜீத்தையும் கர்நாடக மாநிலம் ஒஸ்கேட்டைச் சேர்ந்த இயேசு என்பவரையும் விசாரித்த பேலிசார், செம்மரம் கடத்துவதற்காக மங்களம் அருகே 9 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி கைது செய்தனர். தனக்கும் செம்மரக்கட்டைகளைக் கடத்திய கும்பலுக்கும் தெடர்பு இல்லை என்று கூறிய அஜீத், தாம் ஒரு மருத்துவ மாணவர் என்றும் பகுதி நேர ஓட்டுநர் என் றும் கூறி அழுதுள்ளார். இருப்பினும் அவரை போலிசார் அழைத்துச் சென்றனர்.

