எண்ணெய்க் கிணறு அமைக்க மக்கள் கடும் எதிர்ப்பு: 180 பேர் கைது

எண்ணெய்க் கிணறு அமைக்க மக்கள் கடும் எதிர்ப்பு: 180 பேர் கைது

1 mins read
e867edfd-39f0-466b-ae0e-eeac8bd0a991
-

திருவாரூர் மாவட்டம் கடம்பங்குடியில் புதிதாக ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறு அமைப்பதற்காக நடைபெற உள்ள துரப்பணப் பணியைக் கண்டித்து இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் கடம்பங்குடி பகுதி மக்களிடம் பிரசாரம் செய்தார். இதையடுத்து அவர் உட்பட 10 பேரை போலிசார் கைது செய்தனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள், பள்ளி மாணவர்கள் 22 பேர் உட்பட 180 பேர் கைதாகினர். படம்: தகவல் ஊடகம்