ஆசைக்கு இணங்காத பெண் மீது அமிலம் வீச்சு

ஆசைக்கு இணங்காத பெண் மீது அமிலம் வீச்சு

1 mins read

சென்னை: ஆசைக்கு இணங்க மறுத்த செவி லியர் மீது அமிலம் வீசப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் தனியார் ரத்தப் பரிசோதனை மையத்தில் பணியாற்றி வந்த 30 வயதான பெண்மணி விமலாவை தன் ஆசைக்கு இணங் குமாறு வற்புறுத்தி உள்ளார் அம்மையத்தின் உரிமையாளர் ராஜா. கடந்த ஞாயிற்றுக் கிழமை பணி நேரத்தில் விமலாவை அவர் கெட்ட எண்ணத்தோடு அணுக, உடன்பட மறுத்துள்ளார் யமுனா. ஆத்திரமடைந்த ராஜா, பரிசோதனை மையத்தில் இருந்த அமிலத்தை விமலா முகத்தில் வீச, 46 விழுக்காடு தீக்காயங்களுடன் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.