நாமக்கல் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 472 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவை முட்டித் தள்ளியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட மொத்தம் 20 பேர் காயம் அடைந்தனர். இந்த ஆண்டு நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 203 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். ஜல்லிக்கட்டு நடந்த திடலைச் சுற்றி திருவிழா போல மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் கைதட்டியும் விசில் அடித்தும் மாடுபிடி வீரர்களை ஊக்கப்படுத்தினர். படம்: தகவல் ஊடகம்
சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு
1 mins read
-

