காதில் பூ சுற்றி நூதன போராட்டம்

1 mins read
e4903a95-5f08-40ce-9cf4-879632507c4d
-

தூத்துக்குடி மாவட்டம், ஊரணி பகுதியில் சரள் மண் கொள்ளையடிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. சரள் மண் முறைகேடாக எடுக்கப் படுவதைத் தடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின் றனர். இந்நிலையில் நடவ டிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊரணி பகுதி மக்கள் காதில் பூ சுற்றியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட் டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

படம்: தமிழக தகவல் ஊடகம்