வேலூர்: வேலூரில் ஆயிரம் பெண்களுக்கு மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஆட்சியர் ராமன் தலைமையில் வேலூர் கோட்டை கவாத்து மைதானத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று ரூ.2 கோடி மானியத் தில் 1000 பெண்களுக்கு ஸ்கூட் டர் வழங்கினார். அதே சமயத்தில் ஸ்கூட்டர் பழுது நீக்கும் பணிக்காக மாவட் டம் முழுவதும் கிராமம் மற்றும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த 120 சுய உதவிக்குழு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 23 பேருக்கு முதல் கட்டமாக பயிற்சி அளிக் கப்பட்டது. இந்த 23 பெண்களுக் கும் அமைச்சர் கே.சி.வீரமணி சான்றிதழ், பழுது நீக்கும் உப கரணங்களை ரூ.20,000 மதிப் பில் வழங்கினார்.
ஆயிரம் பெண்களுக்கு மானியத்துடன் ஸ்கூட்டர்
1 mins read

