கோடை காலத்தையொட்டி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மீன் விற்பனை சூடு பிடித்துள்ளது. குறிப்பாக கறுவாடு மீன்களின் விற்பனை சீராக அதிகரித்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மீன் சந்தையில் தினந்தோறும் காலை வேளையில் கறுவாடுகளை வாங்கிச் செல்வதற்கென்றே கூட்டம் அலைமோதுகின்றது. மிகக் குறைந்த விலையில் மீன்கள் கிடைப்பதால் சென்னையின் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கூட பட்டினப்பாக்கம் வந்து கறுவாடுகளை வாங்கிச் செல்கின்றனர். படம்: தகவல் ஊடகம்
கோடையில் சூடுபிடித்தது மீன் விற்பனை
1 mins read
-

