விஜயவாடா: வயல் வெளியில் மேய்ச்சலுக்காக சென்ற பசுக்கள் அங்கிருந்த பூச்சுக்கொல்லியை உண்டதால் கொத்துக் கொத்தாக மடிந்தன. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தின் தயிடா கிரா மத்தைச் சேர்ந்த லக்ஷ்மைய்யா என்பவரின் 100 பசுக்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை சோளம் பயிர் செய்யப்பட்ட வயலில் இருந்த சயனைட் கலந்த பூச்சிக்கொல்லியை உண்டுவிட்டன. அடுத்த நாள் காலையில் 56 பசுக்கள் இறந்துவிட்ட நிலையில், மற்ற பசுக்கள் தறிகெட்டு ஓடின. மருத்துவ சிகிச்சைக்குப் பின் 20 பசுக்கள் காப்பற்றப்பட்ட நிலையில், மற்ற பசுக்கள் தேடப்பட்டு வருகின்றன.
பூச்சிக்கொல்லி உண்ட 56 பசுக்கள் பலி
1 mins read

