பேராசிரியை நிர்மலா மாணவிகளுக்குப் பாலியல் வற்புறுத்தல் அளித்த விவகாரத்தில், நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நேர்மை யான அதிகாரிகளைக் கொண்டு வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். "சிறுமிகள் முதல், மாணவி கள், குடும்பப் பெண்கள் என வயது வித்தியாசம் பார்க்காமல் பாலியல் வன்புணர்வுக்கு உட் படுத்துவது இந்தியா முழுவதும் தொடர்கதையாக உள்ளது. இது போன்றவற்றைத் தடுத்து நிறுத்த சட்டங்கள் மூலம் கடும் தண் டனைகளை வழங்கவேண்டும். பேராசிரியை நிர்மலாதேவியின் கைதும், அவருக்குக் கிடைக்கக் கூடிய தண்டனையும் எதிர்காலத் தில் யாரும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கவேண்டும்.
மேலும் இதில் மத்திய அரசின் ஆதரவில் இருக்கின்ற தமிழக ஆளுநர் சந்தேக வளையத்திற்குள் இருப்பதால், சிபிஐ கூட இதை நேர்மையாக விசாரிக்குமா என் கிற சந்தேகம் இயல்பாகவே எழு கின்றது. ஆகவே நிர்மலாதேவி இதுபோன்ற கீழ்த்தரமான செயல் களில் தொடர்ந்து ஈடுபட்டிருந் தாரா, அவரின் பின்னணியில் உள்ள பசுத்தோல் போர்த்திய புலிகள் போன்ற சக்திவாய்ந்த, அதிகாரமிக்கவர்கள் யார், யார் என்பதைக் கண்டறிய, நீதிமன்றமே தானாக முன்வந்து தனது நேரடிக் கண்காணிப்பில் மிக நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து, உண்மைகளைக் கண்டறிந்து இந்நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக தெரி வித்தால்தான், அச்சமின்றி பெண்பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிகளுக்குத் தைரியமாக அனுப்பக்கூடிய சூழ்நிலை உருவாகும்" என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

