கோவா: ஆந்திராவின் ஜக்கையா பேட்டையைச் சேர்ந்த ரம்யா கிருஷ்ணா (படம்) கோவாவில் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். கோவா கடற் கரைக்கு நேற்று முன்தினம் மாலை பொழுதுபோக்கிற்காகச் சென்ற ரம்யா, தமது கைபேசியில் கடல் அலைகளின் முன் நின்றபடி செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார்.
அப்போது ராட்சத அலைகள் மோதியதில் நிலை தடுமாறிய அந்தப் பெண் கடலுக்குள் விழுந்தார். அலைகளில் அவர் இழுத்துச் செல்லப்படுவதைப் பார்த்த மீனவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் கடும் முயற்சிகளுக்குப் பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டார்.