கதிராமங்கலத்தின் மண் வளத்தை காக்க ஓராண்டுக்கும் மேல் நீடிக்கும் போராட்டம்

கதிராமங்கலத்தின் மண் வளத்தை காக்க ஓராண்டுக்கும் மேல் நீடிக்கும் போராட்டம்

1 mins read
e19b90fa-355f-430e-bd66-ac2a67d6a5bb
-

கதிராமங்கலத்தின் மண் வளத்தை காக்க, அங்கிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் பூமிக்கடியிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. பொதுமக்களின் போராட்டம் தொடங்கி நேற்று முன்தினம் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அங்கு நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பழ.நெடுமாறன், சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படம்: தமிழக தகவல் ஊடகம்