இந்தியாவில் நான்கு நாடாளு மன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தன்வசமிருந்த இரு தொகுதிகளை இழந்துவிட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா=கோண்டியா, நாகலாந்தில் டோகேஹோ ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதி களுக்கும் பத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், கைரானா தொகுதியில் ராஷ்டிரிய லோக் தள வேட்பாளர் தபசும் ஹசன், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மிரிகங்கா சிங்கை 55,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத் தில் தோற்கடித்தார்.
இடைத்தேர்தல்: பாஜகவுக்குப் பின்னடைவு
1 mins read

