சென்னை: தமிழகத்திற்கு தாமிரம் எடுக்கும் தொழிற்சாலைகள் தேவையில்லை என்று குறிப்பிடும் அவசர சட்டத்தைச் சட்டப்பேரவையில் உடனடியாக இயற்றவேண்டும் என்று அமமுக துணைப் பொதுச்செயலர் தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதைச் செய்வதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகிறது என்று செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது அவர் கேள்வி எழுப்பினார். "திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையைப் புறக்கணித்தது முறையற்ற செயல். திமுகவினர் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு போட்டி சட்டப்பேரவை நடத்துவது சரியல்ல," என்றார் தினகரன்.
தினகரன்: தேவை அவசர சட்டம்
1 mins read
-

