மழை நீரைக் கோயில் குளத்தில் சேர்க்க அரசாங்கம் முயற்சி

மழை நீரைக் கோயில் குளத்தில் சேர்க்க அரசாங்கம் முயற்சி

1 mins read

சென்னை: சென்னை மாநக ராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குளங்கள், ஏரிகள் என மொத்தம் 206 நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் 32 நீர்நிலை களைச் சீரமைக்க அறிவார்ந்த நகர் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை மாநகரப் பகுதியில் மழைநீர்ச் சேகரிப்பை மேம்படுத்தும் வகை யில் சென்னையில் உள்ள 15 கோயில்களின் குளங்களில் மழைநீரைக் கொண்டுசேர்க்க திட்டங்கள் போடப்பட்டுள்ளன. அந்தந்த குளங்களைச் சுற்றி உள்ள வீடுகளின் மேற்கூரை களிலிருந்து சேகரிக்கப்படும் மழைநீரை நேரடியாக குளத்துக் குக் கொண்டுசேர்ப்பது திட்டம் என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும்