சென்னை: நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிராக உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சாதாரண குடும்பச் சூழ்நிலையில் வளரும் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு தடையாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். "சிபிஎஸ்இ பள்ளியில் படிப்பவர்களும், சென்னை போன்ற பெரு நகர்களில் உள்ளவர்களும் மட்டுமே மருத்துவப் படிப்பை மேற்கொள்ள முடியும் என்கிற நிலைமை வரும்போது சமூக நீதி எப்படிக் காப்பாற்றப்படும்? சிபிஎஸ்இ அமைப்பை வானத்தில் இருந்து குதித்த தேவதூதர்கள் நடத்தும் அமைப்பு போன்று சித்திரிக்கிறார்கள்," என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தினகரன்: சமூக நீதிக்கு எதிரானது மத்திய அரசின் நீட் தேர்வு
1 mins read

