மத்தியில் யாருடைய ஆட்சி: தமிழகம்தான் தீர்மானிக்கும்: தினகரன்

மத்தியில் யாருடைய ஆட்சி: தமிழகம்தான் தீர்மானிக்கும்: தினகரன்

1 mins read
3b2b6814-2609-43fb-be0b-2fb9c22ca9d3
-

பெங்களூரு: எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சியின் ஆதரவு பெற்ற அணி தான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பெங்களூரு சென்ற தினகரன், அங்குள்ள பரப்பன மத்திய சிறையில் சசிகலாவை சந்தித்தார். அப்போது அரசியல் நிலவரம், கட்சி விவகா ரங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் தொடர்பில் இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய தினகரன், மதவாத கட்சியான பாஜவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றார்.

மேலும் செய்திகள்