ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிப்பதற்காகச் சென்ற முதல்வர் கெஜ்ரிவாலையும் அமைச்சர்களையும் சந்திக்க துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து துணைநிலை ஆளுநர் வீட்டின் வரவேற்பறையில் அவர்கள் அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகும் துணை நிலை ஆளுநர் வராததை அடுத்து கெஜ்ரிவால், அமைச்சர் மனீஷ் சிசோடியா உள்ளிட்டோர் ஆளுநர் வீட்டின் வரவேற்பறையிலேயே படுத்து உறங்கினர். நேற்று காலை வரை இந்தப் போராட்டம் 12 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. படம்: ஊடகம்
துணைநிலை ஆளுநர் வீட்டில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் படுத்தபடி போராட்டம்
1 mins read
-

