திண்டுக்கல்: போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அரசு அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல் லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அருண்குமார் என்ற அந்நபர் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத் தில் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் தொடர்புத்துறை உதவி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அருண்குமார் போதைப்பொருள் பதுக்கி வைத்தி ருப்பதாகப் போலிசாருக்கு ரக சியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலிசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அருண்குமார் வத்தலகுண்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது வீட்டுக்குச் சென்ற போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலிசார் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அரசு ஊழியரின் காரில் 251 கிலோ கஞ்சா: மூன்று பேர் கைது
1 mins read

