திருவில்லிபுத்தூர்: திடீரென மூண்ட காட்டுத்தீ காரணமாக திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அரிய வகை மரங்கள் தீயில் கருகி நாசமாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் காட்டுத்தீ பற்றி மளமளவென பரவியது. இதையடுத்து திருவில்லிபுத்தூர் வனத்துறையினர், வேட்டை தடுப்புக் காவலர்கள், மலைவாழ் மக்கள், தீத்தடுப்பு குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் பல அரியவகை மரங்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.
திடீரென மூண்ட காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் தீக்கிரை
1 mins read

