குற்றாலத்தில் சாரல் மழை குறைந்த நிலையில் அங்கு கடந்த இரு தினங்களாக ஏராளமான சுற்றுப் பயணிகள் குவிந்தனர். இந்த ஆண்டு குற்றாலத்தில் மே மாத இறுதியில் சீசன் களைகட்டியது. அங் குள்ள மூன்று அருவிகளிலும் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் சுற்றுப்பயணிகள் உற்சாகம் அடைந் த னர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் சாரல் மழை குறைந்துள்ளது. இதனால் அருவிகளில் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதனால் அங்கு குவிந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து குளித்துச் சென்றனர். படம்: ஊடகம்
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
1 mins read
-

