தூத்துக்குடி கலவரம்: இருவர் மீது குண்டர் சட்டம்

1 mins read

தூத்துக்குடி: அண்மையில் தூத்துக்குடியில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக அம்மாவட்டப் போலிசார் இருவரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். இந்தக் கலவரம் தொடர்பாக ஏற்கெனவே 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த குருபரணி (வயது 36), ராஜா (வயது 37) ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.