செயற்கை அமைதி: குற்றம்சாட்டும் கனிமொழி

செயற்கை அமைதி: குற்றம்சாட்டும் கனிமொழி

1 mins read

தூத்துக்குடி: தூத்துக்குடி யில் மக்கள் அச்சுறுத்தப்பட் டுள்ளதாகவும் அதிகா ரத்தைப் பயன்படுத்தி அங்கு செயற்கையான அமைதியை உருவாக்கி இருப்பதாகவும் திமுக எம்பி கனிமொழி சாடியுள்ளார். நாடு முழுவதும் இதே நிலைதான் நீடித்து வருவ தாகவும் அவர் தெரிவித் துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், மத்திய அரசு மக்களிடம் பதற்றத்தையும் பயத்தையும் உருவாக்கி வருவதாகச் சாடினார். "தூத்துக்குடியில் நில வும் அமைதி உண்மையா னது அல்ல. இங்கு ஜனநா யகம் இல்லை. மத்திய அர சின் வழியிலேயே செயல் படும் தமிழக அரசும் மக் கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது. ஆனால், அவர்கள் நினைத் தபடி தமிழகத்தில் வன் முறை மூலம் மக்களை அச்சுறுத்தி அடக்கிவிட முடியாது. "நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம்; கொல் லலாம். மக்கள் ஓரளவுக்கு மேல் பொறுமை காக்க மாட்டார்கள்," என்றார் கனிமொழி.