ஸ்ரீமுஷ்ணம்: காட்டுமன்னார்கோவில் அருகே ராஜதுரை, 75, என்ற விவசாயி, தனது நிலத்தை உழுவதற்கு வேளாண் இயந்திரத்தை மானிய விலையில் வாங்க முடிவுசெய்தார். அதன் தொடர்பில் அவர், காட்டுமன்னார்கோவில் வேளாண்துறை அலுவலக உதவி அலுவலர் பாரதிதாசனை, 40, சந்தித்தார். அப்போது ரூ.39,000 கொடுத்தால்தான் உடனே வேளாண் இயந்திரம் வழங்கப்படும் என்று பாரதிதாசன் தெரிவித்ததை அடுத்து அவரிடம் முதலில் ரூ 24,000 கொடுத்துவிட்டு பிறகு அது பற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலிசில் ராஜதுரை புகார் செய்தார். அதிகாரிகள் கையும் களவுமாக பாரதிதாசனை மடக்கினர். பிறகு அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி சிறையில் அடைப்பு
1 mins read

