‘சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம்’

புதுடெல்லி: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐயப்பன் கோயிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதன் தொடர்பில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகள் இணைக்கப் பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய ஐவர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கி பேசிய தலைமை நீதிபதி, "நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. பக்தி என்பது பாலின பாகுபாட் டுக்கு அப்பாற்பட்டது. பெண்கள், ஆண்களுக்குச் சமமானவர்களே. பெண்களைத் தெய்வமாக வணங் கும் நாட்டில் பெண்கள் பலவீன மானவர்கள் அல்லர். இந்தத் தடை இந்து பெண்களின் உரிமைக்கு எதிரானது," என்று குறிப்பிட்டார்.

ஆனால் ஐவரில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். "மத ரீதியான பழக்கங்களை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது, வழிபாடு நடத்துவோர்தான் முடிவு செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார். இருப்பினும் ஐவரில் நால்வர் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதற்கிடையே வரும் 16ஆம் தேதி ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படும்போது பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து மறுபரிசீலனை மனுவைத் தாக்கல் செய்யப்போவதாக சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவாங் கூர் தேவஸ்தானம் அறிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!