சென்னை: தஞ்சை பெரிய கோயிலில் இருந்து 10 சிலைகள் களவாடப்பட்டிருப்பதாகத் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவர் ஐஜி பொன். மாணிக்க வேல் அதிர்ச்சித் தகவல் வெளியிட் டுள்ளார். உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் சிலை உள்ளிட்ட களவாடப்பட்ட சிலைகளுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டிருப்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் உள்ள பல சிலைகள் களவாடப்பட்டதாகவும் அவற்றுக்குப் பதில் போலி சிலை கள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரி வுக்குப் பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து பொன். மாணிக்க வேல் தலைமையிலான போலிசார் சனிக்கிழமையன்று பெரிய கோயி லில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது ஐம்பொன்னாலான 165 கிலோ எடையுள்ள பழமையும் தொன்மையும் வாய்ந்த நடராஜர் சிலை களவாடப்பட்டது தெரிய வந்தது என்றும், தற்போது கோயி லில் இருப்பது போலி சிலை என்றும் போலிசார் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். கடந்த 1960ஆம் ஆண்டுக்குப் பிறகே சிலைகள் கடத்தப்பட்டிருக்க வேண்டுமென காவல்துறை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.
"இந்தக் கோயிலில் ராஜராஜ சோழன் சிலைக்குப் பதிலாக ராஜேந்திர சோழன் சிலையை வைத்து மோசடி செய்தபோது, மற்ற சிலைகள் அனைத்தும் மாற்றப்பட்டிருக்கலாம். "அப்போது தஞ்சை பெரிய கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், தக்கார் ஆகி யோரே இந்தச் சிலைத் திருட் டுக்குப் பொறுப்பானவர்கள். கள வாடப்பட்ட 10 சிலைகளையும் மீட்டு தமிழகம் கொண்டுவர போலிஸ் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது," என காவல் துறை வட்டாரத் தகவல்களை அடிப் படையாக வைத்து தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக கோயிலுக்கு வந்த அதிகாரி மாணிக்கவேல் தலை மையிலான காவல்துறையினர், அங்கிருந்த பக்தர்கள் அனை வரையும் வெளியேற்றினர். பின்னர் கோயில் ஊழியர்களும் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்ட னர். இதனையடுத்து கோயில் கதவுகளை மூடுமாறு உத்தரவு பிறப்பித்தார் பொன்.மாணிக்க வேல். அதன் பின்னர் பூட்டிய கதவுகளுக்குள்ளே ஆய்வுப் பணி நடைபெற்றது. இந்தச் சிலை கடத்தல் முறை கேட்டில் மேலும் பல புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.