தூத்துக்குடி துப்பாக்கி சூடு: கோமாவில் இருந்த இளைஞர் பலி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: கோமாவில் இருந்த இளைஞர் பலி

1 mins read

தூத்துக்குடி: அண்மையில் தூத்துக்குடியில் போலிசார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் ஒருவரான போலிசின் கடுமையான தாக்குதலில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்து, கோமா நிலையில் இருந்து வந்த ஒட்டபிடாரம் அருகேயுள்ள கீழமுடிமண் கிராமத்தைச் சார்ந்த ஜஸ்டின்,29, என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.