சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்துப் பெண்களும் செல்ல லாம் என இந்திய உச்ச நீதிமன் றம் தீர்ப்பளித்தபோதும் பலத்த எதிர்ப்பு காரணமாக அதை நடை முறைப்படுத்துவதில் சிக்கல் நிலவி வருகிறது. கோவில் நடை நேற்று மாலை திறக்கப்படவிருந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த மாதவி என்ற பெண்மணி தமது குடும்பத் தினருடன் மலையேறத் தொடங் கினார். ஆனால் வழியிலேயே போராட்டக்காரர்கள் தடுத்ததால் அவர் கோவிலுக்குச் செல்லும் முயற்சியைக் கைவிட்டு திரும்பிச் சென்றார். அதுபோல் கேரளாவைச் சேர்ந்த இரு பெண்களும் கடும் எதிர்ப்புக் காரணமாக பாதி யிலேயே கோவிலுக்குச் செல்லும் முயற்சியைக் கைவிட்டுத் திரும் பினர்.
குறிப்பாக நிலக்கல், பம்பை பகுதிகளில் போராட்டக்காரர்கள் பெருவாரியாகத் திரண்டு பத்து முதல் ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்கள் யாரும் மலைக்குச் செல்லாதபடி தடுத்து நிறுத்தினர். மலைக்குக் கீழே இருக்கும் முகாம்களில் ஆயிரக்கணக்கில் போலிசார் குவிக்கப்பட்டபோதும் பேருந்து, கார், வேன் என அனைத்து வாகனங்களிலும் பெண்கள் செல்கின்றனரா என அவர்கள் சோதனை செய்தனர்.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளர்கள் மூவர் போராட்டக் கும்பலால் தாக்கப்பட் டனர். அவர்களுள் 'ரிபப்ளிக் டிவி'யைச் சேர்ந்த பூஜா பிரசன்னா என்ற செய்தியாளரின் காரின் கண்ணாடிகள் அடித்து நொறுக் கப்பட்டன. உடன் சென்ற புகைப் படக் கலைஞர்கள் வைத்திருந்த கருவிகளை போராட்டக்காரர்கள் பறித்துக்கொண்டனர்.
சபரிமலையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் இருக்கும் நிலக்கல் மலைப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவருக்கு அடிகொடுக்கும் போலிசார். படம்: ராய்ட்டர்ஸ்