500 பங்ளாதே‌ஷியருக்கு போலி ஆதார் அட்டை: ஆடவர் கைது

திருப்பூர்: திருப்பூர் செவந்தாம் பாளையம் சாமந்த தோட்டத்தில் எந்த ஆவணங்களும் இன்றி தங்கியிருந்த பங்ளாதேஷ் நாட்டவர் 8 பேரை திருப்பூர் போலிசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தங்களுக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அவினாசி ரங்கா நகரில் தங்கி இருந்த பீகார் வாலிபர் ராம்சிஷ் வர்மா, 34, அச்சடித்து கொடுத்தார் எனக் கூறி இருந்தனர்.

ஓர் ஆதார் அட்டைக்கு 6,000 ரூபாய் கொடுத்ததாகவும் அவர்கள் கூறி இருந்தனர். அதனைத் தொடர்ந்து தீவிரத் தேடலுக்குப் பின்னர் ராம்சிஷ் வர்மா கோல்கத் தாவில் கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரித்தபோது அவன் பீகாரில் கணினி நிலையம் நடத்தி வந்தபோது கொடுக்கப்பட்ட அடையாள அட்டையிலிருந்து அவினாசியில் போலி ஆதார் அட்டை அச்சடித்துக் கொடுத்தது தெரியவந்தது.

திருப்பூர் மற்றும் பீகாரில் 500க்கும் மேற்பட்ட பங்ளாதே‌ஷி யருக்கு போலி ஆதார் அட்டை களை அவன் அச்சடித்து விநி யோகித்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஈராண்டுகளாக திருப்பூரில் தங்கி இருந்த ராம்சிஷ் வர்மா பலருக்கும் உதவி இருக்கலாம் என போலிசார் கருதுகிறார்கள். அவனது பின்னணியில் யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட ராம்சிஷ் வர்மா. படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!