கோவை: இலங்கைக் கடற்படை யினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களைக் காக்க அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி படத் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்றார். "தமிழர்களைக் கொன்று குவித்த போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை அனைத்துலக நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். இதைத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் வலியு றுத்தி இருந்தார். நாங்களும் அதே கருத்தை வலியுறுத்துகிறோம்," என்றார் முதல்வர் பழனிசாமி.
இலங்கை அரசியல் களத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு பிரதமராகப் பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கே பதவியில் இருந்து விலக்கப்பட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே அந்நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள் ளார். இதுகுறித்து கருத்து தெரி விக்கும் போதே முதல்வர் பழனி சாமி மேற்கண்டவாறு கூறினார்.