சாதனை அளவுக்குப் பயணம்

1 mins read

சென்னை: தீபாவளியை முன் னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக் கப்படும் சிறப்புப் பேருந்துகளில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 382,000 பேர் பயணம் செய்தனர். சென்னையில் இருந்து இம் மாதம் 2ஆம் தேதி வெள்ளிக் கிழமை 162,000 பேர் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்து உள்ளனர். இவர்களில் 14,000 பேர் முன்பதிவு செய்தும், 148,000 பேர் முன்பதிவு செய்யாமலும் பயணித்துள்ளனர். நேற்றும் எங்கும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.