சென்னை: அண்மைக் காலமாகச் சென்னையில் பல்வேறு கொள் ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை தெலுங்கானா போலிசார் கைது செய்துள்ளனர். சதீஷ் ரெட்டி, நரேந்திரன் ஆகிய அவ்விருவரும் கூகள் வரைபடத்தின் மூலம் கொள்ளை யடித்ததாக தெரிவித்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள் ளது. கொள்ளையடிக்கப் போகும் இடத்தின் அமைப்பு மற்றும் இதர விவரங்களைச் சேகரித்து, அதன் பிறகு இருவரும் கொள்ளைத் திட்டத்தைக் கச்சிதமாகச் செயல் படுத்தி வந்துள்ளது. அண்மையில் சென்னையில் அப்போலோ மருத்துவர் ஒருவரது வீட்டில் கைவரிசை காட்டிய இருவரும் மேலும் சில வசதி படைத்தவர்களின் வீடுகளிலும் கொள்ளையடித்துள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத் சென்றிருந்த சதீஷ் ரெட்டி அங்கு தெலுங்கானா மாநில போலிசாரிடம் வசமாகச் சிக்கினான். ஆந்திரா வில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக சதீஷ் ரெட்டி தேடப்பட்டு வந்தான்.
விசாரணையின்போது நரேந்தி ரன் உட்பட தனது சில கூட்டாளி களுடன் சேர்ந்து சதீஷ் சென்னை யில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள் ளையடிப்பதற்கு முன்பு இக்கும்பல் கூகள் வரைபடம் மூலம் சம்பந்தப் பட்டவர்கள் வசிக்கும் பகுதியைக் கண்காணித்துள்ளது. பின்னர் வீட்டின் அமைப்பையும் கணக்கிட்டு, சாதகமான சமயத் தில் உள்ளே நுழைந்து நகைகள், ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள் ளனர். தற்போது சதீஷ் தெரிவித்த தகவல் மூலம் நரேந்திரனும் சிக்கியுள்ளான். சுதீஷ் ரெட்டியைத் தெலுங் கானா போலிசார் தற்போது சென்னை காவல்துறையிடம் ஒப்ப டைத்துள்ளனர். சதீஷ், நரேந்திர னிடமிருந்து 120 பவுன் நகைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் மூலம் தமிழகத்தில் நடந்த வேறு சில கொள்ளை வழக்குகளிலும் துப்புத் துலங்க வாய்ப்புள்ளதாகப் போலி சார் தெரிவித்துள்ளனர்.