நெல்லை: சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் திடீரென கூடுதல் போலிசார் குவிக்கப்பட்ட தால் பரபரப்பு நிலவியது. நேற்று பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஊர்க்காவல் படையினர் தலைமைச் செயல கத்தை முற்றுகையிட்டுப் போராட் டம் நடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டதாகப் போலிஸ் தரப்பில் பின்னர் விளக்க மளிக்கப்பட்டது. ஊர்க்காவல் படையினருக்கு மாதச்சம்பளம் ஏமதுமில்லை. நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அதிலும் பணி புரியும் நாட்களுக்கு மட்டுமே இத்தொகை வழங்கப்படும். அண்மையில் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கை களை ஊர்க்காவல் படையினர் அரசிடம் முன்வைத்துள்ளனர். இதற்காக அவ்வப்போது சில போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊர்க்காவல் படையினர் ஜல்லிக்கட்டு போராட்ட பாணியில் கடற்கரைப் பகுதியில் திரண்டு, அதன் பின்னர் போராட் டம் நடத்த இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி யது. இதையடுத்தே அங்கு போலி சார் குவிக்கப்பட்டனர். கடற்கரை நோக்கி வரும் சாலைகள் தீவிரமாகக் கண்கா ணிக்கப்பட்டன. சந்தேகப்படும் நபர்களையும், ஊர்க்காவல் படை வீரர்களையும் போலிசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பினர். போலிசார் எதற்காக குவிக்கப்பட்டனர் எனத் தெரியாது பொதுமக்கள் அச்சமடைந்தனர்.