ப.சிதம்பரம்: ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு சொந்தமல்ல

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி தங்களுக்குச் சொந்தமானது என மோடி அரசு நினைப்ப தாகவும் ஆனால் உண்மை யில் அது மத்திய அரசுக்கு சொந்தமல்ல என்றும் ப. சிதம் பரம் குற்றம்சாட்டி உள்ளார். மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலை யில், ஓர் அதிரடி திருப்பமாக உர்ஜித் பட்டேல் ஆளுநர் பதவியை விட்டு 10ஆம் தேதி விலகினார். சொந்த காரணங்களுக்காக பதவி விலகியதாகக் கூறிய அவரது பதவி விலகலை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி யும் மத்திய அரசின் பொரு ளியல் விவகாரங்கள் துறை யின் முன்னாள் செயலாளரு மான சக்தி காந்ததாஸ், 61, பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் இது குறித்துப் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், "மோடி அரசாங்கம் ரிசர்வ் வங்கி தனது அரசின் மற்றொரு துறையாக உள்ள தாகக் கருதுகிறது. சிபிஐ நாம் சொல்வதைக் கேட்கிறது. ஆனால் ஏன் இந்திய ரிசரவ் வங்கி கேட்கவில்லை என நினைக்கிறது. ஒரு மத்திய வங்கியின் சுதந்திரம் என்ன வென்று இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை," என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!