நாமக்கல்: நோய் வந்தால் டாக்டர் களிடம் செல்வதற்கே சிலருக்கு பயமாக இருக்கும். டாக்டர்கள் கூறும் கட்டணத்தைக் கேட்டால் நெஞ்சுவலியே வந்துவிடும் என்றும் சிலர் நகைச்சுவையாகக் கூறுவ துண்டு. இப்படி எந்த ஒரு பயமும் இன்றி நோயாளிகளிடம் ரூ.10 மட்டுமே கட்டணம் பெற்று, சிகிச்சை அளித்து வரும் 80 வயது டாக்டரின் சேவை பலரின் புருவத்தை உயர்த்த செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோக னூரைச் சேர்ந்தவர் டாக்டர் ஜனார்த் தனன், 80. இவர் மோகனூர், சேலம் மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றபின், மீண்டும் அங் கேயே மருத்துவ ஆலோசகராக பணியாற்றி வருகிறார். தன் பணி நேரம்போக மீதி நேரத்தில் வீட்டில், 10 ரூபாய் டாக்டரை கௌரவித்து விருது நோயாளிகளுக்குச் சிகிச்சை யளிக்கிறார். கட்டணம் மிகமிக குறைவாகப் பெறுவதால் பலரும் அவரைத் தேடி வருகின்றனர். அவருக்கு இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் 'சேவையில் இருக்கும் மூத்த மருத்துவர்' என்ற 'டாக்டர் விசுவநாதன் விருது' வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர் ஜனார்த் தனன் கூறியபோது, "என் தந்தை கிருஷ்ணராவ், மருத்துவ ராகப் பணியாற்றினார்.
அவர் நோயாளிகளிடம் குறைந்த கட்டணம் வசூலித்தது போல் நானும் குறைந்த கட்டணம் வாங்குகிறேன். நான் 1966ல் முதன்முதலில் மதுரை மாவட் டம், வெள்ளளூர் கிராமத்தில் டாக்டர் தொழிலை மேற்கொண் டேன். துவக்கத்தில் ரூ.3 கட்ட ணம் பெற்றேன். தற்போது ரூ.10 பெறுகிறேன். நோயாளிகளுக்கு வசதியில்லை என்றால் அதுவும் வாங்குவதில்லை," என்கிறார்.