10 ரூபாய் டாக்டரை கௌரவித்து விருது

நாமக்கல்: நோய் வந்தால் டாக்டர் களிடம் செல்வதற்கே சிலருக்கு பயமாக இருக்கும். டாக்டர்கள் கூறும் கட்டணத்தைக் கேட்டால் நெஞ்சுவலியே வந்துவிடும் என்றும் சிலர் நகைச்சுவையாகக் கூறுவ துண்டு. இப்படி எந்த ஒரு பயமும் இன்றி நோயாளிகளிடம் ரூ.10 மட்டுமே கட்டணம் பெற்று, சிகிச்சை அளித்து வரும் 80 வயது டாக்டரின் சேவை பலரின் புருவத்தை உயர்த்த செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோக னூரைச் சேர்ந்தவர் டாக்டர் ஜனார்த் தனன், 80. இவர் மோகனூர், சேலம் மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றபின், மீண்டும் அங் கேயே மருத்துவ ஆலோசகராக பணியாற்றி வருகிறார். தன் பணி நேரம்போக மீதி நேரத்தில் வீட்டில், 10 ரூபாய் டாக்டரை கௌரவித்து விருது நோயாளிகளுக்குச் சிகிச்சை யளிக்கிறார். கட்டணம் மிகமிக குறைவாகப் பெறுவதால் பலரும் அவரைத் தேடி வருகின்றனர். அவருக்கு இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் 'சேவையில் இருக்கும் மூத்த மருத்துவர்' என்ற 'டாக்டர் விசுவநாதன் விருது' வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர் ஜனார்த் தனன் கூறியபோது, "என் தந்தை கிருஷ்ணராவ், மருத்துவ ராகப் பணியாற்றினார்.

அவர் நோயாளிகளிடம் குறைந்த கட்டணம் வசூலித்தது போல் நானும் குறைந்த கட்டணம் வாங்குகிறேன். நான் 1966ல் முதன்முதலில் மதுரை மாவட் டம், வெள்ளளூர் கிராமத்தில் டாக்டர் தொழிலை மேற்கொண் டேன். துவக்கத்தில் ரூ.3 கட்ட ணம் பெற்றேன். தற்போது ரூ.10 பெறுகிறேன். நோயாளிகளுக்கு வசதியில்லை என்றால் அதுவும் வாங்குவதில்லை," என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!