சேலம்: எந்த ஒரு கொள்கையும் கோட்பாடும் இன்றி அதிகாரப் பசியுடன் ஆட்சியைக் கைப்பற்று வதிலேயே குறிக்கோளாக இருந்து வரும் திமுகவில் தனது தொண்டர்கள் 2,000 பேருடன் சேர்ந்துள்ள செந்தில் பாலாஜி, கூடிய விரைவில் நடுத்தெருவில் தான் நிற்கப்போகிறார் என்று தமி ழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம், கூடமலைப் பகுதியில் பொதுமக்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பழனிசாமி கலந்து கொண்டு பேசியபோது, "எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின், அம்மாவின் மறைவிற்குப் பிறகு இந்த ஆட்சி கலைந்துவிடும், தான் முதல்வராகிவிடலாம் என்று பகல் கனா கண்டுவந்தார். அது பலிக்காமல் போய்விட்டது.
"டிடிவி தினகரனும் திமுகவின் தூண்டுதலில் அதிமுக கட்சியை உடைக்க அமமுக என்ற ஒரு புது கட்சியை ஆரம்பித்தார். "இன்றைக்குப் பாலாஜி என்கிற ஒரு செங்கல் அதிலிருந்து கழன்று சென்றுவிட்டது. அவர் முதல்வ ராகும் ஆசையில் எங்களிடம் இருந்து பிரிந்து சென்றார். இப் பொழுது ஸ்டாலினை முதல்வராக் கச் சென்றிருக்கிறார். கடைசியில் யாருடன் நடுத் தெருவில் நிற்கப் போகிறாரோ தெரியவில்லை. "பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தார் கள். அதில் சறுக்கல் வந்தவுடன் காங்கிரசிடம் கூட்டு சேர்ந்து அங்கே மத்திய அமைச்சராக இருந்தார்கள்.
ஆகமொத்தத்தில் அவர்களுக்குத் தேவை அதி காரம் ஒன்றுதான். "14 ஆண்டுகாலம் தொடர்ந்து மத்தியில் ஆட்சி செய்த ஒரு கட்சியான திமுக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அவர் களது குடும்பம் மட்டும்தான் நான்கு பக்கங்களிலும் வளர்ந்தது. "கருணாநிதி, அவருடைய பையன், இப்பொழுது பேரனும் வந்துவிட்டார். எல்லாம் வாரிசு அரசியல். சுயநலமே ஆள்கிறது. "ஆனால் அதிமுகவில் அப்படி அல்ல. திறமை இருப்பவர்கள், மக்களுக்காக உழைப்பவர்கள் தான் பதவிக்கு வரமுடியும். சாதா ரண தொண்டன், விவசாயத் தொழிலாளிகள் கூட பதவிக்கு வரலாம்," என்றார் பழனிசாமி.