மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் சென்றார். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து நீண்ட இழுபறிக்குப் பின், மூன்று மாநிலங்களுக்கான முதல்வர்களைக் காங்கிரஸ் தேர்வு செய்து அறிவித்தது. அதன்படி, ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் நேற்று காலை ஜெய்ப்பூர் ஆல்பர்ட் மண்டபத்தில் நடந்த விழாவில் பதவியேற்றனர்.
இதில் பங்கேற்க வருமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதையேற்று அங்கு சென்ற மு.க.ஸ்டாலின் நேற்று இருமாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவிலும் கலந்துகொண்டார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒன்றாகப் பயணம் செய்கின்றனர்.