தூத்துக்குடி: மூடப்பட்ட தூத்துக் குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் இயக்கு வதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத் துக்குடி கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். இதனால் தூத்துக்குடி பகுதிகளில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது. தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு திரண்டிருந்த மாணவர்கள், "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மாக மூடு" என்று வலியுறுத்தி உரக்க முழக்கமிட்டு திடீர் போராட் டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்றத்தைக் கூட்டி சிறப் புத் தீர்மானம் இயற்றவேண்டும் எனவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அதேபோல் "ஆலையை நிரந்தர மாக மூட சட்டமன்றத்தில் சிறப் புத் தீர்மானம் இயற்றவேண்டும்," என்று வலியுறுத்தி தீபா பேரவை யினர் சார்பில் வாயில் கறுப்புத் துணிகட்டி போராட்டம் நடை பெற்று வருகிறது. தீர்ப்பாயம் அளித்துள்ள உத் தரவு காரணமாக தூத்துக்குடி மக்கள் கொதித்துப் போயுள்ள நிலையில், தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஸ்டெர்லைட் திறப்பிற்கு இடைக்காலத் தடை வாங்கத் திட்டமிட்டு வருகிறது.
தூத்துக்குடி வஉசி கல்லூரியின் முன்பு நேற்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும்" என முழக்கமிட்டனர். மாணவர்களிடம் போலிஸ் காரர் ஒருவர் பேசுகிறார். இந்த ஆலையைத் திறக்க அனுமதிக்கக்கூடாது எனத் தூத்துக்குடி மாவட்டத் துக்குட்பட்ட பல பகுதிகளிலும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடித்துள்ளன. படம்: ஊடகம்