சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளு மன்றத் தேர்தலைச் சந்திக்க அதிமுக பல பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதிமுகவில் ஓபிஎஸ், இபி எஸ் என இரண்டு அணிகள் இருக்கின்றன. அந்த இரண்டு அணிகளுக்கும் இடையே கீழ் மட்ட அளவில் கடுமையான மோதல் நடந்து வருகிறது. இரு அணிகளையும் சமா தானப்படுத்தி ஓரணியாக சேர்க்க பல முயற்சிகள் எடுக்கப் பட்டபோதிலும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரால் அது இப்போது வரை முடியாத செயலாக நீடிக் கிறது. இறுதிக்கட்ட முயற்சியாக அதிமுகவில் மொத்தமுள்ள 52 மாவட்டங்களைப் பிரிப்பதற்கு அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் புதிய மாவட்டச் செயலாளர்களை உருவாக்க திட் டமிடப்பட்டுள்ளது. முக்கியமான மாவட்டங்களில் அதிமுகவின் அமைச்சர்களையே மாவட்டச் செயலாளர்களாக அதி முக தலைமை அறிவிக்க உள் ளது. அதற்கு முன்னோடியாக திருவண்ணாமலைக்கு சேவூர் ராமச்சந்திரனும் விழுப்புரத்திற்கு சிவி சண்முகமும் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அதே பாணியில் தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் அனை வரும் மாவட்டச் செயலாளர்களாக ஆகிறார்கள்-. அதுபோக மீதமுள்ள மாவட் டங்களில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

