தலைக்கவசம் அணியாதோருக்கு பத்து குறட்பா தண்டனை

பெரம்பலூர்: இருசக்கர வாகனங் களில் தலைக்கவசம் (ஹெல்மட்) அணியாமல் வருபவர்கள் காவல் துறையினர் சொல்லும் 10 திருக் குறளை எழுதவைக்கும் நூதன தண்டனை வியப்பை ஏற்படுத்தி யுள்ளது. திருவாரூரைச் சேர்ந்த நாவுக் கரசன் என்பவர் பெரம்பலூர் நகர போக்குவரத்து காவலராக பணி யாற்றி வருகிறார். இவர், போக்குவரத்து விதி களை மீறும் வாகன ஓட்டுநர் களுக்குத் தரும் தண்டனை மூலம் பெரம்பலூர் பகுதியில் ஒரு பிரபலமாக மாறியுள்ளார். பணியின்போது தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டுநர்களைப் பிடித்து அவர்களி டம் வெற்றுத்தாள் மற்றும் பேனா வைக் கொடுத்து தான் சொல்லும் 10 திருக்குறளை பிழையில்லாமல் எழுதச் சொல்லி தண்டனை விதித்து வருகிறார். அப்படி 10 திருக்குறளையும் சரியாக எழுதிவிட்டால் அபராதம் விதிக்காமல் தலைக்கவசம் அணி வதன் அவசியம் குறித்து அறி வுரையை மட்டும் கூறி வழியனுப்பி வைக்கிறார் நாவுக்கரசன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!