விலை உயர்ந்த மல்லிகை; விலை போகாத வெங்காயம்

மதுரை: புத்தாண்டு மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.2,800க்கு விற்பனையானது. தொடர்ந்து பெய்துவரும் பனியால் மல்லிகைச் செடியிலேயே உதிர்ந்து வரத்து சரிந்துவிட் டது. மேலும் புத்தாண்டு தினம் என்பதாலும் தேவை அதிகம். ஏற்றுமதிக்கும் அதிகளவில் மல்லிகை கொண்டு செல்லப் படுகிறது. எனவே காலையில் கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்ற மல்லிகை, மாலையில் ரூ.2,800க்கு உயர்ந்தது. இரு வாரங்களுக்கு முன்பு ரூ.200க்கு விற்ற மல்லிகை, திடீரென பத்து மடங்கிற்கும் மேல் விலை உயர்ந்துவிட்ட தால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், சின்ன வெங்காயம் விலை போகாமல் விவசாயிகளுக்குப் பெருநஷ் டத்தை ஏற்படுத்தி வருவதால் அவர்களுக்கு இழப்பீடு கோரி கோவையில் நூதனப் போராட் டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னால் வெங்காயக் கடை விரித்த விவசாயிகள் ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு விற்றனர். மேலும், ஒரு கிலோ வெங் காயம் வாங்கியோருக்கு இன் னொரு கிலோ இலவசமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் திரண்ட தொகையை பிரதமர் பொது நிவாரண நிதிக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!