அமைச்சர்: மின்கோபுரத்தை விட்டால் வேறு வழி இல்லை

சென்னை: தமிழகத்தில் விவசாய விளைநிலங்கள் ஊடாக மின் கோபுரங்களை அமைக்கும் முயற்சிகளை எதிர்த்து போராட் டம் நடந்து வருகிறது. விவசாயி கள், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணியுடன் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. என்றாலும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசிடம் தெரியப்படுத்தப் போவதாக அமைச்சர் உறுதி கூறினார். இதனிடையே, அமைச்சரின் கருத்துகளைத் தாங்கள் விவ சாயிகளிடம் தெரிவிக்கப்போவ தாகவும் விவசாயிகளின் கருத்து களைக் கேட்டு அடுத்த நட வடிக்கை பற்றி முடிவு செய்யப் படும் என்றும் அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விவசாயிகளின் பேரா ளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட முயன்ற சுமார் 300 விவசாயி களை போலிஸ் கைதுசெய்தது. வடமாநிலங்களிலிருந்து தமி ழகத்திற்கும் பிற மாநிலங்களுக் கும் மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்காக தமிழகத்தில் 13 வடக்கு, மேற்கு மாவட்டங்களில் வயல்களில் உயர்அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின் றன. இப்படி அமைக்கப்படும் கோபுரங்களுக்கு வாடகை தர வேண்டும் என்று கேட்டு விவ சாயிகள் போராடி வருகிறார்கள்.

இதனிடையே, சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பான சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத் திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி, 800 கிலோவாட் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல புதைவட மின் கம்பிகள் இன்னும் கண்டுபிடிக் கப்படவில்லை என்பதால் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதைத் தவிர வேறுவழி இல்லை என்றார். மின்கோபுரங்கள் அமைக்கும் இடத்திற்கான உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படு கிறது என்ற அமைச்சர், தமிழகத் தில் மின்திட்டங்களை விரிவு படுத்தவேண்டிய அவசியம் இருப் பதை அனைத்துக் கட்சிகளும் உணர்ந்து ஒத்துழைக்கவேண் டும் என்று கோரினார். விவசாயிகளின் கோரிக்கை களை அரசு நிறைவேற்ற வேண் டும் என்று பாமக, திமுக உள் ளிட்ட பல அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!