சிக்கன நடவடிக்கை: ஐந்து மாநில வானொலி நிலையங்கள் மூடல்

சிக்கன நடவடிக்கை: ஐந்து மாநில வானொலி நிலையங்கள் மூடல்

1 mins read

புதுடெல்லி: கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் செயல்பட்டு வந்த அனைத்திந்திய வானொலி அலுவலகங்களை மூட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அனைத்திந்திய வானொலி அலுவலகங்களை மூடி, ஒலிபரப்பை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சிக்கன நடவடிக்கையாக கேரளாவின் திருவனந்தபுரம், மேகாலயாவின் ‌ஷில்லாங், குஜராத்தின் அகமதாபாத், தெலுங்கானாவின் ஐதராபாத், உத்தரப் பிரதேசத்தின் லக்னோ ஆகிய நகரங்களில் உள்ள வானொலி நிலையங்களை மூடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.