பொங்கல் பரிசு: ஆயிரம் ரூபாய் வழங்க உயர் நீதிமன்றம் தடை

சென்னை: தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் அனைவ ருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் இந்தத் திட்டத்தை எதிர்த்து பொதுநல மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். வருமானம் உள்ளிட்ட எந்தப் பாகுபாடும் இன்றி அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை யுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவையும் பொங்கல் பரிசுத் தொகுப் பாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் அனை வருக்கும் ரொக்கப்பரிசு வழங்கினால் அது அரசுக்கு தேவையில்லாத நிதிச் சுமையை ஏற்படுத்தும் என டேனியல் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

"ஏற்கெனவே கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை முடிக்கவில்லை. அதற்கு மிகப்பெரிய அளவில் நிதி தேவைப்படும் சூழ்நிலையில், இத்தகைய பரிசு வழங்குவதை ஏற்க முடியாது," என டேனியில் தமது மனுவில் மேலும் தெரிவித்திருந்தார். இம்மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!