சென்னை: தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் அனைவ ருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் இந்தத் திட்டத்தை எதிர்த்து பொதுநல மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். வருமானம் உள்ளிட்ட எந்தப் பாகுபாடும் இன்றி அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை யுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவையும் பொங்கல் பரிசுத் தொகுப் பாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் அனை வருக்கும் ரொக்கப்பரிசு வழங்கினால் அது அரசுக்கு தேவையில்லாத நிதிச் சுமையை ஏற்படுத்தும் என டேனியல் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
"ஏற்கெனவே கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை முடிக்கவில்லை. அதற்கு மிகப்பெரிய அளவில் நிதி தேவைப்படும் சூழ்நிலையில், இத்தகைய பரிசு வழங்குவதை ஏற்க முடியாது," என டேனியில் தமது மனுவில் மேலும் தெரிவித்திருந்தார். இம்மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.